வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பதை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் வாடகை வீடுகளிலும், வாடகை அறைகளிலும் தங்கி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 02 நாட்களில் ஒவ்வொரு கிராம அதிகாரியின் பிரிவுகளிலும் தற்காலிகமாக வசிப்பவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.
தகவல் சேகரிப்பு
வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வீடுகளில் 37,183 குடும்பங்களில் 112,963 பேரும், வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட அறைகளில் 34,133 பேரும், காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள், தாதியர் என 31517 பேரும் தற்காலிகமாக வசிக்கின்றனர் என்றும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒழுங்குமுறை தரவு அமைப்பு, தானியங்கி கைரேகை அடையாள அமைப்புக்கு அனுப்பி அறிக்கைகளைப் பெற்று, போதைப்பொருள் பணியகத்தின் தரவு அமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன்படி மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
