சாதனை படைத்த மன்னார் மடுக்கரை மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சாள்ஸ் நிர்மலநாதன்
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மடுக்கரை என்னும் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் இம்முறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதனை படைத்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை மாணவிகளின் வீடுகளிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயரத்தினம் ஜெயப்பிரதா மாவட்ட மட்டத்தில் கலைப்பிரிவல் 3A சித்திகளைப் பெற்று 1ம் நிலையையும், 2A,B சித்திகளைப் பெற்று 4ம் நிலையையும் பெற்றுள்ளனர். மிகவும் பின்தங்கிய கிராம மாணவர்கள் வறுமை கல்விக்கு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.
இம்மாணவிகள் நானாட்டானில் உள்ள டிலாசால் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவிகளாவார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் இம்மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்,
பல்கலைக்கழக படிப்புக்குத் தேவையான மேலதிக தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன்,
பல்கலைக்கழக பட்டப்படிப்பு நிறைவடைந்ததும் எதிர்காலத்தில் எமது மன்னார்
மாவட்டத்தில் தங்களது சிறப்பான பணியைத் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.



காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
