இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம்
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் தலைவராக குசால் மெண்டிஸின் பெயர் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் தற்பொழுது ஒருநாள் அணியையும் சரித் அசலங்க வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலப்பரீட்சை
மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார்.
இலங்கை ஒருநாள் அணியில் சரித் அசலங்க, பெதும் நிஸ்ஸங்க, அவிஸ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிசான் மதுசங்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, மஹீஸ் தீக்ஸன, அகில தனஞ்சய, தில்சான் மதுசங்க, மதீஸ பத்திரண மற்றும் ஹசித பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan