சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ள பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ துதெர்தே, தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய "போதைப்பொருள் ஒழிப்புப் போரின்" போது ஆயிரக்கணக்கானோரை சட்டத்திற்குப் புறம்பாகக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.
கடந்த 2011 - 2019 வரையிலான காலப்பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பாக, 81 வயதான துதெர்தே மீது சுமத்தப்பட்ட "மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை" சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒருமனதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளதோடு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணையில் 500-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் கலந்துகொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாடு 2019ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தில் இருந்து வெளியேறிய போதிலும், குற்றங்கள் நடந்தபோது அந்நாடு உறுப்பினராக இருந்ததால் இந்த வழக்கைத் தொடர நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
கடந்த ஓராண்டிற்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ள துதெர்தே, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி விடுதலையாக முயன்றார். ஆனால், அவர் விசாரணையில் பங்கேற்க உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியுடன் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

துதெர்தேயின் சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போதிலும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதனை நீதிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகின்றனர்.
தற்போதைய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையும் இந்தச் செய்தியை வரவேற்றுள்ள நிலையில், இந்த விசாரணை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam