இலங்கையில் காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இடைவெப்பமண்டல ஒருங்கிணப்பு வலயத்தின் தாக்கம் மற்றும் இலங்கைக்கு அருகில் உருவாகக்கூடிய கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (06.05.2026) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டமான வானிலை
மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் வாய்ப்பும் உள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் உருவாக்கம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என வளிமண்டலவில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam