முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்
முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 85 ரூபாவாக அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தம்
இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, ஒக்டோபர் 01) ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4.24% திருத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறையிட ஆணைக்குழுவின் 1955என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 25 95 555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
