இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
உர வகைகளின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உர வகைகளில் விலையை குறைக்க உர இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல உர வகைகளின் விலையினை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் குறைவடைந்த உரத்தின் விலை

இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா ஒரு மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் தேயிலை பயிர்ச்செய்கைக்கான பல்வேறு உரவகைகளின் விலையானது ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் நந்தன சமரகோன் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் உரத்திற்கான விலை குறைவடைந்தமையினாலேயே உரத்தின் விலை குறைக்கப்பட்டமைக்கான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுத்தமாக பின்வாங்கிய விஜய் டிவி, மொத்தமாக கைப்பற்றிய சன் டிவி சீரியல்கள்... டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் Cineulagam
அப்படி போடு, குணசேகரனை அழிக்க அறிவுக்கரசியுடன் இணையும் ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam