இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
உர வகைகளின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உர வகைகளில் விலையை குறைக்க உர இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல உர வகைகளின் விலையினை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் குறைவடைந்த உரத்தின் விலை

இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா ஒரு மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் தேயிலை பயிர்ச்செய்கைக்கான பல்வேறு உரவகைகளின் விலையானது ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் நந்தன சமரகோன் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் உரத்திற்கான விலை குறைவடைந்தமையினாலேயே உரத்தின் விலை குறைக்கப்பட்டமைக்கான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam