பரீட்சை திகதிகளில் மாற்றமா? வெளியாகியுள்ள அறிவிப்பு
2022ஆம் வருடத்தில் க.பொ.த (உ/த), தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்தார். உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது.
எனினும், இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.
முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ம் திகதியும் உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா மேலும் தெரிவித்தார்.