தமிழரசின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவில் மாற்றம் வரலாம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பி்ல் அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தாம் வர வேண்டும் என்ற ஆசை சுமந்திரனுக்கு வந்து விட்டது.
இந்தநிலையிலே, சுமந்திரனையா அல்லது சீ.வி.கே சிவஞானத்தையா தெரிவு செய்ய போகின்றார்கள் என்பது தெரியாது.
தற்போது, குறித்த இருவரில் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற நடவடிக்கைகளில் தமிழரசுக் கட்சி இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 16 மணி நேரம் முன்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri
