அரசியலிலிருந்து விலகியமைக்கான காரணத்தை முதன் முதலில் வெளியிட்டுள்ள சந்திரிக்கா
குடும்ப அரசியலுக்கு நான் எதிரானவர்.இதன் காரணமாகவே நான் இப்போது அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறேன். தீவிரவாத அரசியலுக்கு திரும்ப மாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனக்கு இப்போது 75 வயதாகிறது. என்னால் முடிந்த அளவு அரசியல் செய்தேன். நாடு மூன்று தடவைகள் வீழ்ந்த போது, நாடும் எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வீழ்ந்த போது, நான் மீண்டும் வந்து அவர்களைத் தூக்கிவிட்டேன். 2015 கடைசியாகவே இருந்தது.
1994 நான் வெளிநாடு சென்றேன். என்னை கொல்ல முயன்ற போதும் மீண்டு வந்தேன். ஏனென்றால் என்னால் நிறைய வேலை செய்ய முடிந்தது. பொருளாதாரம் பாரியளவில் கட்டமைக்கப்பட்டது.
போருக்குப் பதிலாக அமைதியை நிலைநாட்ட முடிந்தது. நான் மூன்று போர்களில் வென்று வீட்டிற்கு சென்றேன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அரசியலமைப்பை கொண்டுவருவது தான்.
ஆனால் முதன்முறையாக அரசியல் அகராதியில் அமைதி என்ற வார்த்தை இடம்பெற்றதால் மக்கள் வெட்கப்படாமல் பேச ஆரம்பித்தனர். அதற்காக போராடினார்கள். நல்லாட்சியை மீண்டும் கொண்டு வந்து நாட்டை ஆளும் முக்கிய முறைகள் வகுக்கப்பட்டன.
எனது 11 வருடங்களில் நான் மிகவும் உற்சாகமாக சேவையாற்றினேன். நான் செய்த வேலையினால் தான் மகிந்த ராஜபக்சவினால் 9 வருடங்கள் எதுவும் செய்யாமல் ஆட்சியில் இருக்க முடிந்தது. எதுவும் செய்யவில்லை என்று சொல்வதும் தவறு. பெரும் அதிகார துஸ்பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இறுதியாக, பெரும்பாலான அரசு ஊழியர்கள் திருடர்களாக்கப்பட்டனர். அதன் விளைவுகளைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
