ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவரும் சந்திரிகா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பண்டாரநாயக்க நினைவேந்தல் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய கோவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வை வழக்கம் போல் நடத்தாமல் இருக்க முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க நினைவு தினம் செப்டம்பர் 26 அன்று வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனர் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க செப்டம்பர் 26, 1959 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஆறு தசாப்தங்களாக, பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வு ஹோரகொல்லாவில் உள்ள பண்டாரநாயக்க நினைவிடத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
