ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவரும் சந்திரிகா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பண்டாரநாயக்க நினைவேந்தல் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய கோவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வை வழக்கம் போல் நடத்தாமல் இருக்க முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க நினைவு தினம் செப்டம்பர் 26 அன்று வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனர் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க செப்டம்பர் 26, 1959 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஆறு தசாப்தங்களாக, பண்டாரநாயக்க நினைவேந்தல் நிகழ்வு ஹோரகொல்லாவில் உள்ள பண்டாரநாயக்க நினைவிடத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
