கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க, பியூமி ஹங்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிப்பு
அழகு கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹங்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நடத்திய விருந்தில் 22 - 25 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதில் பங்கேற்ற ஏனைய நபர்களை அடையாளம் காணும் நோக்கில் சிசிடிவி காணொளிகள் பகுப்பாய்வு செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
முதலாம் இணைப்பு
அழகு கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹங்சமாலி ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிறந்த நாள் விருந்தை நடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், இவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் விருந்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
