லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்
லெபனானில் போர்நிறுத்தம் சாத்தியப்பட்டாலும் காசாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மிகவும் கடினம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது காசாவில் போர் நிறுத்தத்தை உருவாக்க வழிவகுக்கும் என அவர் கூறியிருந்தார்.
எனினும், சின்வாரின் மரணம் முடிவல்ல என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
ஹமாஸ் அமைப்பினரின் கருத்து
இஸ்ரேலால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதன்மை இடத்தை வகித்த சின்வார், கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேலில் நடாத்தப்பட்ட தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் ஆவார்.

சின்வார் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஹமாஸ் அமைப்பினர், இது தம்மை மேலும் பலப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காவாவிற்குள் இஸ்ரேல் ஊடுருவிய பின்னர், 42,500 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri