புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த எமக்கான சந்தர்ப்பம் : வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்
தேர்தல் முடிவுகள் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை தந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.
புரட்சிகரமான மாற்றம்
உண்மையில் முற்று முழுதாக நாங்கள் எமது பிரதேச மக்களுக்கு நன்றி கூறுகின்றோம். எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
நாடு முழுவதும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். இது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை தந்துள்ளது.
மக்கள் மயப்படுத்தப்பட்ட அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கூடிய வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஆட்சியை நடத்துவோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
