பயங்கர வன்முறையில் முடிந்த வெற்றிக் கொண்டாட்டம்.. 219 பேர் படுகாயம்
ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பிரான்ஸின் Paris Saint-Germain (PSG) அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் நடந்த வெற்றி கொண்டாட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன.
இறுதிப் போட்டியில் பிரித்தானியாவின் Arsenal F.C. அணியும், பிரான்ஸின் Paris Saint-Germain அணியும் மோதின. கடும் போட்டியுடன் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து நடைபெற்ற பெனால்டி முறையில் PSG அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை
வெற்றிக் கொண்டாட்டங்கள்..
இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். எனினும், சில பகுதிகளில் கொண்டாட்டங்கள் கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக Paris நகரின் சாம்ப்ஸ்-எலிசீஸ் (Champs-Élysées) பகுதி மற்றும் PSG அணியின் சொந்த மைதானமான Parc des Princes சுற்றுவட்டாரங்களில் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்ட நிலையில், பொலிஸாருக்கும் இரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
பல இடங்களில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், கடைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Laurent Nuñez வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் மொத்தம் 219 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 57 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர். மேலும், வன்முறை தொடர்பில் நாடு முழுவதும் 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 450க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
219 பேர் படுகாயம்..
அதேவேளை, பாரிஸ் நகரின் வளையச் சாலையில் (Ring Road) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், கலவரக்காரர்கள் அந்தச் சாலையை மறிக்க முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் 17 வயது சிறுவன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வெற்றி அணிவகுப்புகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சுமார் 6,000 பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Eiffel Tower அருகிலுள்ள Champ-de-Mars பகுதியில் ரசிகர்கள் திரண்ட நிலையில், PSG வீரர்கள் வெற்றி அணிவகுப்பில் பங்கேற்றதுடன், பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தலைமையிலான வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டனர்.
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam
சர்ச்சைக்கு மத்தியிலும் CM விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித் தயாருக்கு அஞ்சலி! படுவைரலாகும் வீடியோ Manithan