ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை யாழில் ஆரம்பித்த சம்பிக்க! எதிரணிகள் வியூகம்
வடக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார் என அறியமுடிந்தது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக சம்பிக்க ரணவக்கவைக் களமிறக்கத் தெற்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதற்கான முன்னாயத்த வியூகங்களில் எதிரணிகள் களமிறங்கியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள - பௌத்த மக்கள் மத்தியிலும், பௌத்த தேரர்கள் மத்தியிலும் சம்பிக்கவுக்குத் தனியான இடம் இருப்பதால் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக அவரைக் களமிறக்க எதிரணிகள் தீர்மானித்துள்ளன எனவும் கூறப்படுகின்றது.
அவரது 47 ஆவது படையணியின் பெயரிலேயே அவர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இற்குச் சம்மதம் தெரிவித்துள்ள சம்பிக்க, கள நிலைமைகளை நேரில் ஆராய நாடு முழுவதற்கான பயணங்களைத் தற்போது ஆரம்பித்துள்ளார்.
அதன் ஓர் கட்டமாகவே அவர் வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) அவர் யாழ். நகரில் விநியோகித்த துண்டுப்பிரசுரங்களில் இந்த
அரசையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சாரப்பட
கருத்துக்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam