சிறை செல்லத் தயாராக இருங்கள் - சம்பிக்கவிற்கும் ராஜிதவிற்கும் எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawakke), ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) ஆகியோர் சிறைக்கு செல்ல தயாராக வேண்டும் என அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி(Nissanga Senathibathy) தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவர் சம்பந்ததமான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய சாட்சியங்கள் கிடைத்து விட்டதாகவும் இதனால், இவர்கள் விரைவில் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் எனவும் சேனாதிபதி கூறியுள்ளார்.
சம்பிக்க மற்றும் ராஜிதவுக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கோவிட் தொற்று நோய் பரவல் காரணமாக அந்த விசாரணைகள் சற்று தாமதமாகியுள்ள போதிலும் அவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் நிசங்க சேனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri