ரஷ்ய விமானம் கட்டுநாயக்கவில் தடுக்கப்பட்ட பின்னர் காத்திருக்கும் பெரும் சவால்கள் (VIDEO)
இலங்கையின் தற்போதைய நிலைமையை பொருத்தவரையில் ரஷ்யாவிற்கும், இலங்கைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் வேல்சில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் தொடர்பான சிக்கல் காரணமாக இலங்கையின் தேயிலைத்துறை, சுற்றுலாத்துறை என்பன பாரிய நெருக்கடினை எதிர்நோக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம்
அதாவது ரஷ்யாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு ரஷ்யா எரிபொருட்களை வழங்கி உதவுவதாக உறுதியளித்த நிலையில், இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடையாக உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு ரஷ்யா உதவி செய்தாலும் கூட தற்போதைய இலங்கை அரசாங்கம் மேற்குலகத்தை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ரஷ்யாவின் உதவிகளை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,