போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளராக மதிமேனன் பதவியேற்பு
போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் இன்று (02)வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச சபைக்குச் சென்று தனது கடமைகளைப் பொறுப்பேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதன்போது அப்பிரதேச சபையின் பிரதித் தவிசாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தங்கராசா கயசீலன், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும், க.பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு
பதவியேற்றுள்ள தவிசாளரையும், ஏனைய உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
10 வட்டாரங்களைக் கொண்ட போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 16 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 8 உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும், 5 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பிலும், 3 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







