வவுனியாவில் ஆலயத்திற்கு வழிபட சென்ற பெண்ணின் சங்கிலி பறிப்பு
வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற பெண் ஒருவரிடம் சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவர் தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா- உக்குளாங்குளம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்வதற்காகப் பெண் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப் பெண்ணை ஆலயம் அருகில் வழிமறித்து ஒருவருடைய பெயரைக் கூறி ஆலயத்தில் குறித்த நபர் உள்ளாரா எனக் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்க முற்படுகையில் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பெண் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியே இதன்போது அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ்
நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

36 வருடத்தை எட்டியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம்... படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
