விதிக்கப்பட்டது தடை! பல ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்களால் பெட்ரோலிய கூட்டுத்தாபன வளாகத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ச்சியாக முன் கொண்டு செல்ல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்தன.
எனினும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,