வெளிநாட்டில் பணிபுரிய சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் : பல கோடி ரூபாய் மோசடி
வெளிநாட்டில் பணிபுரிய சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்குவதாக கூறி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பம்பலப்பிட்டி தனியார் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மோசடிக்கு உள்ளான இளைஞர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகளின் விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சான்றிதழ் மோசடி
பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.