ரூபா நெருக்கடியை எதிர்நோக்கும் மத்திய வங்கி! ஈபிஎப் பணத்தில் இருந்து 60 ஆயிரம் ரத்துச் செய்யப்படும் நிலை

Central Bank of Sri Lanka Champika Ranawaka Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples employee provident fund
By Benat Jul 02, 2023 06:16 AM GMT
Report

மத்திய வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் உண்டியல்கள் பிணைமுறியங்களாக மாற்றப்பட்டால் மத்திய வங்கி ரூபா கையிருப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த சூழலை முகாமைத்துவம் செய்ய ஒன்று பணம் அச்சிட வேண்டும் அல்லது நேரடி மற்றும் மறைமுக வரி அறவிடலை அதிகரிக்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(01) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நான் 2016 ஆம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைத்தேன். வங்குரோத்து நிலை அடைந்ததன் பின்னரே கடன்களை மறுசீரமைக்க தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி எதிர்நோக்கும் நெருக்கடி

ரூபா நெருக்கடியை எதிர்நோக்கும் மத்திய வங்கி! ஈபிஎப் பணத்தில் இருந்து 60 ஆயிரம் ரத்துச் செய்யப்படும் நிலை | Central Bank Will Face Rupee Crisis In Future

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச பிணைமுறியாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மற்றும் அதிக வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்ட வணிக கடன்கள் என்பன தற்போதைய நிதி நெருக்கடிக்கு ஒரு காரணியாக உள்ளது.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தேசிய கடன் தவிர்க்க முடியாதது. இருப்பினும் கடன் மறுசீரமைப்பின் போது பொருளாதார வெளிப்பாட்டு கொள்கை சிறந்த முறையில் பின்பற்றப்பட வேண்டும்.

தேசிய கடன்களை மறுசீரமைத்து விட்டோம் என அரசாங்கத்தால் ஓய்வெடுக்க முடியாது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் சர்வதேச அரசமுறை கடன்களை மறுசீரமைத்து இணக்கப்பாட்டு கொள்கை ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்வைக்க வேண்டும்.

நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி சமர்ப்பித்துள்ள வருமானம் மற்றும் செலவு தொடர்பிலான அறிக்கை முரண்பட்டதாக உள்ளது இவ்விடயம் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.

2022 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று உறுதிப்படுத்தப்பட்ட பிணைமுறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களை அடிப்படையாக கொண்டு இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தற்போதைய நிதி தரப்படுத்தலுக்கு அமைய மதிப்பிடப்பட்டுள்ள தொகையில் மாற்றம் ஏற்படும். கடன் மறுசீரமைப்பின் சுமை நடுத்தர மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் வசமிருந்த 1.5 ரில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. மறுபுறம் அவர்கள் வசமுள்ள 5 ரில்லியன் பெறுமதியான பிணைமுறிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவில்லை.

விநியோகிக்கப்பட்டுள்ள திறைசேரி உண்டியல்களை, பிணைமுறிகளாக மாற்றியமைக்க கடன் மறுசீரமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் உண்டியல்கள் பிணைமுறியங்களாக மாற்றப்பட்டால் மத்திய வங்கி ரூபா கையிருப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த சூழலை முகாமைத்துவம் செய்ய ஒன்று பணம் அச்சிட வேண்டும் அல்லது நேரடி மற்றும் மறைமுக வரி அறவிடலை அதிகரிக்க வேண்டும். இரண்டு தீர்மானத்தில் ஒன்றையேனும் நடைமுறைப்படுத்தினால் மக்களே பாதிக்கப்படுவார்கள்.

கடன் மறுசீரமைக்கப்படாமல் இருந்திருந்தால் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு சுமார் 120 பில்லியன் ரூபா வட்டி கிடைக்கப்பெற்றிருக்கும் அதனை உழைக்கும் மக்களுக்கு பகிர்ந்தளித்திருக்கலாம். ஆனால் கடன் மறுசீரமைப்பின் பின்னர் 9 சதவீத வட்டி வீதமே வழங்கப்படும்.

2025 ஆம் ஆண்டு ஆண்டு முதல் ஈ.பி.எப் நிதியத்தில் இருந்து வருடாந்தம் 60 ஆயிரம் ரூபா இரத்து செய்யப்படும் இதனால் சாதாரண மக்களே மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அப்பாவி மக்கள் மீது கடும் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன.இவை முற்றிலும் தவறானது என குறிப்பிட்டார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US