வங்கிக் கணக்கு விபரங்கள்! பொதுமக்களுக்கு மத்திய விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
நிதியியல் மோசடிகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இணையத்தள இணைப்புக்களை “கிளிக்” செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடி நடவடிக்கை
வங்கிக்கணக்கு விபரங்களை மற்றும் OTP (One Time Password) இலக்கத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாமென்றும் இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகள், அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும், மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களிலும் மோசடி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடலுக்குள் கட்டப்படும் மிகப்பெரிய சுரங்கப்பாதை., ஜேர்மனி டு டென்மார்க் 7 நிமிடத்தில் பயணம் News Lankasri
Box office: 17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ Cineulagam