மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு சலுகை: சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Government Employee Dayasiri Jayasekara
By Dhayani Mar 06, 2024 01:49 AM GMT
Report

நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றதாக எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச ஊழியர்கள் 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தியபோது அதனை மேற்கொள்ள இடமளிக்காமல் மத்திய வங்கி அதிகாரிகள் தங்களின் சம்பளத்தை 70 வீதமாக அதிகரித்துக்கொண்டுள்ளது.

இவ்வாறான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு சட்டத்துக்கு முரணானதாகும்.

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானம்: பொலிஸார் எச்சரிக்கை

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானம்: பொலிஸார் எச்சரிக்கை


மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு சலுகை: சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் | Central Bank Officers Salaries Of Increased

வங்கி கடன்

நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுத்துகின்றன.

மத்திய வங்கியில் தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடனுக்கு நூற்றுக்கு ஒரு வீதமே அறவிடப்படுகின்றது.

ஆனால் நாட்டின் ஏனைய சாதாரண மக்கள் வங்கிகளுக்கு சென்று கடன் பெற்றால் அவர்களுக்கு வட்டி நூற்றுக்கு 20.5 வீதமாகும். அதனால் தான் மத்திய வங்கிக்கு சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட போது, அதில் ஓரளவு சுயாதீனம் வழங்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தோம்.

மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு சலுகை: சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் | Central Bank Officers Salaries Of Increased

அத்துடன் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்றத்துக்கு இவர்கள் வந்தபோது, அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்டதற்கு, கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே இதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் மத்திய வங்கி, மத்திய வங்கி தொழிற்சங்கங்களுடன் அவ்வாறான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதா என எமக்கு தெரியாது. ஆனால் தொழில் திணைக்களத்தில் அவ்வாறான ஒன்று பதிவு செய்யப்பட்டதில்லை.

மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு சலுகை: சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் | Central Bank Officers Salaries Of Increased

சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம்

மத்திய வங்கியும் மத்திய வங்கி தொழிற்சங்கங்களும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்குத் தொழில் ஆணையாளரின் அனுமதி பெற்றுக்கொண்டிருக்காவிட்டால், அது சட்ட பூர்வமானதல்ல. அப்படியானால் சம்பள அதிகரிப்பு சட்ட ரீதியானதல்ல.

அத்துடன் நாட்டில் ஏனைய திணைக்களங்களான பெற்றொலியம், துறைமுகம், மின்சார சபை எனப் பல நிறுவனங்கள் அதன் நிர்வாக அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.

மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு சலுகை: சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் | Central Bank Officers Salaries Of Increased

இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொண்டு பதிவு செய்துகொண்டுள்ளவர்களுக்குக் கூட தங்களுக்கு தேவையான முறையில் சம்பள அதிகரிப்பு செய்துகொள்ள இந்த அரசாங்கம் இடமளிப்பதில்லை.

அத்துடன் வாழ்வதற்கு வழியில்லை என தெரிவித்து 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தொழிற்சங்கங்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தின. ஆனால் அந்த போராட்டக்காரர்களுக்கு கண்ணீர்ப் புகை அடித்து விரட்டினார்கள்.

ஆனால் நூற்றுக்கு 60,70 என மத்திய வங்கி தங்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டுள்ளது. அதனால் இவ்வாறான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா விடுதியிலிருந்து தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்: பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சுற்றுலா விடுதியிலிருந்து தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்: பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்து : மூவர் பலி

நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்து : மூவர் பலி


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US