மத்திய வங்கியில் இருந்து மாயமான மில்லியன் கணக்கான பணம்! வெளியான விசேட அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5,000 ரூபா நாணயத்தாள்கள் காணால் போனமை கண்டறியப்பட்டுள்ளது.
அவசியமான வழிமுறைகள்

இந்த விவகாரம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri