இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
ஒரு நாள் கொள்கை வட்டி விகிதத்தை தற்போது உள்ள 8 சதவீத நிலையில் தொடர்ந்து பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையின் கூட்டம் நேற்று (25.03.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாணயக் கொள்கை சபையின் முடிவு
தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார போக்குகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர், நாணயக் கொள்கை சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீத இலக்கு நிலைக்கு படிப்படியாக கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையிலும், பொருளாதாரம் அதன் அதிகபட்ச திறன் நிலையை அடைய உதவும் நோக்கத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri