சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் தகவல்
நாட்டின் பிணை எடுப்புத் திட்டத்தின் முதல் மறுஆய்வுக்கு, சர்வதேச நாணய நிதியம் அடுத்த மாதம் ஒப்புதல் அளிக்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது.
இது பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 900 மில்லியன் டொலர் நிதியை விடுவிக்க வழிவகை செய்யும் என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்து ஏழு தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை மூழ்கியது.
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு
எனினும், மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு 2.9 பில்லியன் டொலர்களை விடுவித்தமையை அடுத்து பொருளாதாரம் ஓரளவு நிலைப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், இரண்டாவது தவணை நிதியில் 330 மில்லியன் டொலர்கள் கிடைத்த பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்து மேலதிக நிதியுதவியை இலங்கை பெற முடியும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேய நாணய நிதியத்தின் ஒப்புதலை டிசம்பர் 6 ஆம் திகதிக்குள் எதிர்பார்ப்பதாக இலங்கையின் திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
