இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
சட்டவிரோதமான முறையில் பொதுப் பணத்தை வைப்புத் தொகையாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாட்டை தெரிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஆளுநர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் நடத்தப்பட்ட நான்காவது கொள்கை வட்டி விகித மாற்றங்கள் பற்றிய அறிவித்தல் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொள்கை வட்டி விகிதங்கள்
கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதால், மக்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வட்டி விகிதங்களைக் குறைக்கும் வகையில் வங்கி மற்றும் நிதியை ஒழுங்குபடுத்த மத்திய வங்கி தற்போது தயாராக இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
