இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! : தமிழக மீனவர்கள் கோரிக்கை

India Government Sea Fishermen Sri Lanka Navy Sri Lanka '
By Ashik Jan 04, 2022 10:51 AM GMT
Report

 இலங்கை, இந்திய நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கோரிக்கை முன்வைப்பதாக ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி கடந்த 13 நாட்களுக்கு பின்பு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாத நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை மீண்டும் கரை திரும்பியுள்ளதாக ராமேஸ்வரம் செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா மேலும் தெரிவிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக மீனவர்களையும் அவர்கள் சென்ற 10 படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து நேற்று திங்கட்கிழமை (3) காலை சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் தனுஷ்கோடி கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.

மேலும் நேற்று திங்கட்கிழமை (3) மாலை முதல் தொடர்ந்து கடலில் வீசி வரும் கடும் காற்று காரணமாக படகுகள் எல்லை தாண்டி சென்று விட்டால் இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மீனவர்கள் மீன் பிடிக்காமல் பாரிய நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் வரத்து இல்லாமல் கரை திரும்பியதால் படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் எனவும் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.     

தொடர்புடைய செய்திகள்     

முல்லைத்தீவு கடலில் இந்திய மீனவர்களின் அட்டகாசம்!

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US