சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து: மின்சார சபையின் ஊடக பேச்சாளர் பதவி விலகியதாக தகவல்
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தள பதிவில், குறித்த ஊடக பேச்சாளர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவரது அறிக்கைக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் இலங்கை மின்சார சபை நிர்வாகம் தனக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறிப்பிட்ட அறிக்கை தொடர்பில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சர்ச்சை
நொயல் பிரியந்த அண்மையில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் இல்லையேல் குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்தமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
I agree with the sentiments of @JeevanThondaman and many more that had raised the lack of empathy and professionalism in the statement made by the CEB spokesperson.
— Kanchana Wijesekera (@kanchana_wij) February 22, 2024
The statement does not reflect the views of the Govt or the CEB. and would like to extend my apology on behalf of… https://t.co/n8v7zQownt