நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகள்
தம்மை ஒரு சுயாதீன நிறுவனமாக பிரகடனப்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மத்திய வங்கியின் அதிகாரிகளிடம், பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழு (COPE) அல்லது பொது நிதிக்கான குழு (COPF) என்பன விளக்கம் பெற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மத்திய வங்கி தன்னை ஒரு சுயாதீனமான நிறுவனமாக அடையாளப்படுத்தியுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

விவகாரம் தொடர்பில் கேள்வி
இந்த விவகாரம் குறித்து சபையில் உள்ள எந்தக் குழுவும் மத்திய வங்கியின் அதிகாரிகளிடம் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam