யாழ்.மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்(video)
யாழ்ப்பாணம் - மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வலிகாமம் வடக்கு பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ந்தும் திருடப்பட்டு வருவதை எதிர்த்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24.04.2023) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது யாழ்.மல்லாகத்தில் உள்ள காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
மனு கையளிப்பு
இதேவேளை ஆர்ப்பாட்ட இடத்தில் பசு ஒன்றையும் கட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதையடுத்து தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடமும் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பொலிஸ் அத்தியட்சகர் இன்றையதினம் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - கஜிந்தன்




அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
