சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மனு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.
இதில் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் மனுவின்பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனுதாரர் தெரிவிப்பதாவது, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் நாட்டின் ஒற்றுமை மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லது அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமாக கவிழ்க்க நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு வழங்கியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவரை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனது தம்பிகளால் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam