முன்னாள் ஆளுநர் லக்ஷ்மண் யாப்பாவுக்கு எதிராக வழக்கு
முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஆளுநருமான லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் பதவிக்கால ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியில் பத்திரிகைகளில் ஒரு வாழ்த்துச் செய்தி விளம்பரமாக பிரசுரிக்கப்பட்டது.
வழக்கு
அதன் மூலம் அரசாங்கத்துக்கு 17 இலட்சம் ரூபா இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அன்றைய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா மற்றும் முதலீட்டுச் சபையின் அன்றைய பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் சாட்சிகளாக பதினைந்து பேர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வழக்கு ஆவணங்களாக 21 தடயப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri