யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(04) திங்கட்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி முதல் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில், சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் 59 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 3 வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்துள்ளதாக யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது யோஷித ராஜபக்சவும் டெய்சி பாட்டியும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு விசாரணை
ஆனால், இந்த வழக்கை விசாரணை செய்யும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன விடுமுறையில் உள்ளதால் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
