மன்னார் பிரதேச செயலாளரின் தலையீட்டினால் மழை நீர் வெளியேற்றுவதற்கான ஏற்பாடு
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் மன்னார் - சாந்திபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தமையினால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (4) மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையில் உடனடியாக மன்னார் பிரதேசச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் (M.Piradheep) துரித நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார்.
மன்னார் பிரதேசச் செயலாளரின் துரித நடவடிக்கையால் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மன்னார் நகர சபையினர் குறித்த வெள்ளப்பாதிப்பு காணப்படும் பகுதிகளில் நேரடி சென்று பார்வையிட்டதோடு, குறித்த பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் தற்காலிகமாக வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் செயற்பாட்டில் தற்காலிக வடிகால் அமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேரடியாக மழை நீரை கடலுடன் கலப்பதற்கு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
