60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு லெபனானில் மீண்டும் தொழில் வாய்ப்பு
60 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் லெபனானில் தொழிலுக்காக செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
லெபனானில் காணப்பட்ட கோவட் வைரஸ் தொற்று நோய் காரணமாக கடந்த மாரச் மாதம் நடைமுறைக்கு வரும் வகையில், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் லெபனானில் தொழிலுக்காக வருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
தற்போது லெபனானில் கோவிட் தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த எந்த தடுப்பூசியாக இருந்தாலும் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருப்பது கட்டாயம் எனவும் லெபனானுக்கான இலங்கை தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
