மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள கர்தினால்
நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ( Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களின் செயற்பாடுகளில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.
நீதிமன்ற சுதந்திரத்தின் அடிப்படையில், நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கும் முழு சுதந்திரம் நீதிபதிகளுக்கு உள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம்
எனவே, ஒரு நீதிபதி ஒரு வழக்கை நடத்துவது அல்லது முடிவெடுப்பதில் எந்த வெளியாரும், அரசாங்கமோ அல்லது வேறுவிதமாகவோ தலையிடவோ அல்லது குறுக்கிட முயற்சிக்கவோ கூடாது என்று கர்தினால் ரஞ்சித் அறிக்கை ஒன்றில் கேட்டுள்ளார்.

அண்மையில், தங்களுக்கு பாதகமான சில தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளை விமர்சித்து, அரசு வெளியிட்ட அறிக்கைகள் தம்மை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையின் முழுமையான சுதந்திரம் என்பது அரசியலமைப்பின் மூலக்கல்லாகும், இது நிறைவேற்று அதிகாரம் அல்லது பிற அரசு நிறுவனங்களின் அத்துமீறலுக்கு எதிராக ஒரு அரணாக செயல்படுகிறது.
எனவே மக்கள் பாதுகாப்பின் கடைசி கோட்டையாக விளங்கும் நீதித்துறையை தாக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருவதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam