கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளரின் காரில் மோதுண்டு ஒருவர் பலி
தம்புள்ளை – பல் வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (17.02.2024) இடம்பெற்றுள்ளது.
மாத்தளை - நாவுல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி கைது
குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்ட போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |