இலங்கை கடற்பரப்பில் தீவிபத்திற்கு உள்ளான கப்பல்! - நீதிமன்றம் விதித்துள்ள தடை
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீவிபத்திற்கு உள்ளான எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை பொறியியலாளர் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று ஆரம்ப விசாரணைகளையும், கப்பலின் தலைவர் உட்பட ஏழு குழு உறுப்பினர்களின் அறிக்கைகளைப் பதிவுசெய்துள்ளமையும் நிறைவு செய்தது.
இந்நிலையில், கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, குறித்த அனைவரும் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தீவிபத்திற்கு உள்ளான கப்பலில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக என்பதை ஆராய இலங்கை கடற்படையை சேர்ந்த ஒன்பது டைவர்ஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். தீ விபத்தால் ஏற்படும் வெளிப்புற சேதங்களை மதிப்பிடுவதற்காக டைவர்ஸ் கப்பலின் நீரில் மூழ்கிய பகுதிகளை ஆய்வு செய்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.