கனேடிய இராணுவம் கரீபியன் படையினருக்கு பயிற்சி வழங்க திட்டம்
கனேடிய இராணுவம் கரீபியன் படையினருக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கனேடிய படையினர் ஜமெய்க்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெய்ட்டியில் முன்னெடுக்கப்பட உள்ள அமைதி காக்கும் பணிகளில் கரீபியின் தீவுகள் படையினர் கூட்டாக இணைந்து கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் கோரிக்கை
ஜமெய்க்காவின் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கனேடிய இராணுவப் படையினர் பயிற்சி வழங்கும் பணியில் ஈடுபட உள்ளதாகத் கூறப்படுகின்றது.
ஹெய்ட்டியில் மிக மோசமான வன்முறகைள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கனேடிய படையினர் ஒரு மாத காலம் ஜமெய்க்காவில் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |