புலம்பெயர்தல் அனுமதிகள் தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள தகவல்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், கனடா தற்காலிக குடியிருப்பு அனுமதிகளில் மாற்றம் செய்ய திட்டமிட்டுவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
அவ்வகையில், கனடாவின் வீடமைப்புத்துறை, கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை அமைச்சரான சீஹன் ஃப்ரேசர் இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மாணவர்களுக்கான ஆதரவு
முன்னர் புலம்பெயர்தல்துறை அமைச்சராக இருந்தபோது சீஹன் ஃப்ரேசர் சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்து வந்ததாகவும், பின்னர் வீடமைப்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள்தான் காரணம் என குற்றம் சுமத்தியமை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மாணவர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, கனடா வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என சீஹன் ஃப்ரேசர் கூறியுள்ளார்.
இதன்படி தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளவர்கள் என்னும் வகையின் கீழ் சர்வதேச மாணவர்களும், பணி விசாவில் கனடா வருபவர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
