யாழ். வணிகர் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கனேடிய வர்த்தக சம்மேளனம்
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனமும் (The Srilanka - Canada Business Council) யாழ். வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன.
பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக நேற்று (09) பிற்பகல் யாழ். (Jaffna) வணிகர் கழகத்தில் குறித்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
இதற்கமைய, யாழ். வணிகர் கழகம், யாழ். முகாமையாளர் நிறுவனம், யாழ். முகாமைத்துவ கழகம் மற்றும் திருகோணமலை வர்த்தக அமையம் ஆகிய நிறுவனங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ். வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், இலங்கை - கனடா வர்த்தக சம்மேளன தலைவர் பிரியந்த சந்திரசேக உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |