கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த தமிழருடையது எனவும், 64 வயதானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாத ஆரம்பத்தில் காணாமல்போனதாக கூறப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ரோயல் கனேடியன் மவுன்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
மேலும், கடந்த மாதம் 9ஆம் திகதி காணாமல் போனதாக முறையிடப்பட்டபோது அவர் அதிக போதையில் இருந்ததாகவும் பொலிஸாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிடவில்லை என்பதுடன், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
