தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக விடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை அழைப்பு

Sri Lankan Tamils Tamils Jaffna
By Shan Apr 01, 2025 10:20 PM GMT
Report

தையிட்டியில் சட்ட விரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (04.01.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாய்வான் எல்லை பகுதிகளில் திடீர் பரபரப்பு

தாய்வான் எல்லை பகுதிகளில் திடீர் பரபரப்பு

சமய தலைவர்கள்

“நீதி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் யாழ் நாக விகாரையில் அவ் விகாரையின் தலைமைப்பிற்கு மற்றும் சமய தலைவர்கள் நீதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்போடு தையிட்டியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை காரணமாக பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக விடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை அழைப்பு | Call To Deceive Tamils Again

இது சமய பிரச்சினையாக உருவேற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது தமிழர்களின் தேசிய அரசியல் சார்ந்த பிரச்சனை. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை மற்றும் மட ஆலயத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் தமிழர்களிடமும் அரசும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மன்னிப்பு கோருவதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி உறுதிப்படுத்தப்படுதலும் வேண்டும்.

அதுவே சமய மற்றும் இன நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும். படையினர் தமது இராணுவ வரையறைகளுக்கு அப்பால் சென்று நாட்டின் சட்டத்தையும் மீறி அரச வளங்களையும், தனியார் வளங்களையும் உபயோகித்து இன மற்றும் சமய முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடு தையிட்டியில் விகாரை எழுப்பியுள்ளதோடு அதனை மேலும் பலப்படுத்த மடாலயத்தையும் கட்டியுள்ளனர்.

மத்திய ஹைய்ட்டியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 கைதிகளை திறந்து விட்ட ஆயுதக்குழுவினர்

மத்திய ஹைய்ட்டியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 கைதிகளை திறந்து விட்ட ஆயுதக்குழுவினர்

அரசியல் தலைமைகள்

கட்டிட மற்றும் நாட்டின் சட்ட நெறிமுறை தவறிய குற்றவாளிகள், இதற்கு அனுமதி அளித்த அரசியல் தலைமைகள், துணை நின்ற பேரினவாத சக்திகளை நீதி முன் நிறுத்த திராணியற்ற அரசும் நீதி அமைச்சரும் சமய நல்லிணக்கம் எனும் போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே.

தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக விடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை அழைப்பு | Call To Deceive Tamils Again

அதுவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கையில் அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக மறைமுகமாக எடுக்கப்படும் முயற்சியாகவே இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனலாம்.

அத்தோடு இதயச் சுத்தியோடு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி ஆட்சியாளர்கள் பயணிக்க விரும்புகிறார்கள் இல்லை என்பதையுமே வெளிபடுத்துகின்றது. இது சாதாரண மக்களை அழைத்து அரசியல் பம்மாத்து காட்டும் வெளி வேடமே” என்றுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US