அதிக விலைக்கு டைல்ஸ் விற்றால் 1977இற்கு அழைப்பேற்படுத்துங்கள்
அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977க்கு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள டைல்ஸ் தட்டுப்பாட்டை சில விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் டைல்ஸ் விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இலங்கையில் உள்ள முன்னணி டைல்ஸ் நிறுவனம் ஒன்று அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பது குறித்து வர்த்தகர்கள் மீது முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சில டைல்ஸ் விற்பனையாளர்கள் பல்வேறு வண்ண டைல்ஸ்களை வழங்கி நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan