பிரித்தானியாவில் இடம்பெற்ற Cake competitionஇல் கலந்துகொண்ட முதல் ஈழத்தமிழர்
2025இற்கான Cake International competition நிகழ்வானது கடந்த 31ஆம் திகதி முதல் 02.11.2025 இன்று வரை பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்கம் நகரிலுள்ள National Exhibition centre (NEC)இல் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
Cake International competition (Cake and bake) இதில் 7000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல பிரிவுகளிலும் கலந்து கொண்டுள்ளனர்.
Cakes பிரிவில் 35 பிரிவுகளும், Bake பிரிவில் 23 பிரிவுகளுமாக இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
1994ஆம் ஆண்டு International Craft & Hobby Fair Ltd என்ற நிறுவனம் Cake Established என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1996ஆம் ஆண்டு Cake International (CI) ஆக சர்வதேச அளவில் விரிவாக்கியது.
பின்னர் அது 2000 ஆண்டளவில் சர்வதேசப் புகழ் வாய்ந்த கேக் போட்டியாக இது மாறியது.
உலகளாவிய போட்டி
2017இல் இது மேலும் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு “CAKE BIRMINGHAM”, “CAKE LONDON” என கேக் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. 2020, 2021 காலப்பகுதியில் COVID‑19 தொற்று காரணமாக “Virtual Edition” என்ற பெயரில் நடைபெற்றது.
2024 ஆண்டு Cake International competition தொடங்கப்பட்ட 30ஆவது ஆண்டு விழா (30 Years of CI) பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
2025 ஆம் ஆண்டு இந்த Cake International competition நிகழ்வானது 31ஆவது வருடமாக நடப்பதுடன் அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து “Cake International and Bake International Awards” என இரு பிரிவுகளாக முதல் முறையாக நடத்தப்படுகிறது.
இன்று பல பிரிவுகளாக பல பெயர்களில் ஜப்பான், டுபாய், அமெரிக்கா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் Head of Cake International Shows” என்று இந்த போட்டி அழைக்கப்படுகின்றது. சர்வதேச புகழ்வாய்ந்த Cake International competition நிகழ்வாக இந்நிகழ்வு திகழ்கிறது.
1996 இல் இந்த Cake International competition சர்வதேச மயப்பட்டதனால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் 1997ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கலந்து கொண்ட Mr.R.Climent என்பவர் பல கோல்ட் மெடல்களை பெற்றுக்கொண்டார். இவரே பிரித்தானியா தவிர்ந்த வெளி நாடுகளிலிருந்து கலந்து கொண்டு கோல்ட் மெடல் பெற்ற முதலாவது போட்டியாளராவார்.
மதிவதனி மயூரன்
1997 இலிருந்து 2004 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக கோல் பல மெடல்களை வென்று கேக் இன்ரநசனல் பதிவுப் புத்தகத்தில் உலகச் சாதனையாளராக பதியப்பட்டதுடன் அந்தக்கால பிரித்தானிய பிரதமராக இருந்த ரொனி பிளேயரிடம் பாராட்டும் நினைவுப் பரிசும் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்து.

சில காலங்கள் பிரித்தானிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த நபராக D.R.Climent இருந்தாரென்பதும். இவர் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரென்பதும் மேலதிக தகவல்களாகும்.
இவரின் பின் பல சிங்கள, முஸ்லிம் போட்டியாளர்கள் இன்றுவரை பங்குபற்றி வருகின்றனர். இருந்தபோதிலும் ஈழத்தமிழர்கள் இதன் கடந்த 30 வருட வரலாற்றில் பங்குபற்றியிருக்கவில்லை.
31ஆவது வருடமாக நடைபெறும் Cake International competition show 2025இல் லண்டனைச் சேர்ந்த மதிவதனி மயூரன் பங்குபற்றி கோல்ட் உட்பட 5 மெடல்களையும் பெற்றுக்கொண்டார்.
31வது வருட Cake International போட்டியில் பங்குபற்றி போட்டியிட்ட முதலாவதாக ஈழத்தமிழர் இவராவார். இவர், கேக் வரலாற்றில் முதலாவது உலக சம்பியனான Mr.R.Climentஇன் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam