அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி நாளை(28.06.2023) புதன்கிழமை அமைச்சரவை கூடவுள்ளது.
அமைச்சர்களுக்கு பணிப்புரை
இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு இதன்போது அனுமதி பெறப்படவுள்ளது.
இது தொடர்பான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றமும் எதிர்வரும் சனிக்கிழமை கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி எம்.பிக்களுடன் சந்திப்பு
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு தௌிவுடுப்பத்துவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளது
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
