உயர்நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றதா...! விக்னேஸ்வரன் கேள்வி

Sri Lanka Politician Sri Lanka Government C. V. Vigneswaran Ministry of justice Sri lanka
By Sajithra May 16, 2024 08:45 AM GMT
Report

இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் இயங்குகின்றதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சர்வதேச கருத்தரங்கத்திற்கான பிரதம அதிதி உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

"இலங்கையில் நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே பிரதம நீதியரசர் விடயத்தில் ஒரு தவறிழைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காய்காலில் சர்வதேச ஊடகங்களின் கண்காணிப்பு

முள்ளிவாய்க்காய்காலில் சர்வதேச ஊடகங்களின் கண்காணிப்பு

பிரதம நீதியரசர் நியமனம் 

முன்பு, சிரேஷ்ட நீதியரசராக உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் நாகலிங்கம் இருந்தார். அவர் அப்போதைய ஆளுநர் நாயகம் விடுமுறையில் சென்ற போது அவர் சார்பில் பதில் ஆளுநர் நாயகமாக (Governor General) பதவி ஏற்றவர்.

c-v-vigneswaran-speech-

இந்நிலையில், நீதியரசர் நாகலிங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய பிரதம நீதியரசர் பதவி அப்போது சட்டத்துறைத் தலைமையதிபதியாக (Attorney General) இருந்த எச்.எச்.பஸ்நாயக என்பவருக்கு வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து சட்டத்துறைத் தலைமையதிபதிகளை பிரதம நீதியரசராக நியமிப்பதும் அந்த திணைக்களத்தில் உயர் பதவிகளில் உள்ளோரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவற்றிற்கு நியமிப்பதும் ஒரு வழக்கமாக ஆகிவிட்டது.

பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சாரதி - இலங்கையில் நடந்த துயர சம்பவம்

பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சாரதி - இலங்கையில் நடந்த துயர சம்பவம்

சட்டத்துறை 

அதேவேளை, நீதியரசர் துரைராஜாவும் குறித்த திணைக்களத்தில் இருந்தே சிரேஷ்ட நீதிமன்றங்களுக்கு நியமனம் பெற்றவர்.

c-v-vigneswaran-speech-

அந்தத் திணைக்களத்தில் வேலை செய்பவர்கள் கடின உழைப்பாளர்கள். அவர்களின் தரத்தைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. என் மகன் அந்த திணைக்களத்திலேயே உயர் பதவியில் இருக்கின்றார்.

ஆனால், தமது தொழில் வாழ்க்கை பூராகவும் அரசாங்கம் சார்பில் வழக்குகள் பேசிக் கொண்டிருந்த இவர்களை திடீரென்று மக்கள் சார்பில் நீதிபதிகளாக நியமிப்பது அரசாங்கத்திற்கு சார்பான தீர்ப்புக்களை அவர்களிடம் இருந்து கொண்டு வராதா என்ற கேள்வி எழுகின்றது.

பலர் அந்தக் காலத்தில் பேசிக் கொண்டது என்னவென்றால் நீதியரசர் நாகலிங்கத்தை விடுத்து சட்டத்துறைத் தலைமை அதிபதியை பிரதம நீதியரசர் பதவிக்கு அப்போது நியமித்தமை ஒரு பௌத்த பெரும்பான்மையினத்தவரை அப் பதவியில் இருத்த வேண்டும் என்ற அரசியல் காரணத்தினாலேயே என்பதாகும். 

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நீதித்துறை பதவிகள்  

அது மாத்திரமன்றி, என் காலத்திலும் இது தான் நடந்தது. எனக்கு ஐந்து வருடங்கள் கனிஷ்டரான சட்டத்துறைத் தலைமையதிபதியான பெரும்பான்மை பௌத்தர் ஒருவர் வெற்றிடம் வந்த போது நேரடியாக நியமனம் பெற்றார்.

c-v-vigneswaran-speech-

இருப்பினும், நீதித்துறையில் சட்டத் துறைத் திணைக்கள வழக்கறிஞர்களையோ தனியார் வழக்கறிஞர்களையோ ஒரு குறிப்பிட்ட கால தேர்ச்சியின் பின்னர் நீதிபதிகளாக்குவதே உசிதம் என்று எனக்குப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில், இன்று இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் இயங்குகின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அதற்காக நீதித்துறை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று நான் கூறவரவில்லை. அரசாங்கத்துக்காக உழைத்தவர்களை நேரடியாக நீதித்துறைக்குள் உள்நுழைப்பது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையே வெளிக் கொண்டு வருகின்றேன் ” என தெரிவித்துள்ளார். 

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US